மத்திய ஆக்லாந்தில் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குயின் தெருவில் உள்ள மைக்கேல் ஹில் நகைக்கடை நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கொள்ளையிடப்பட்டது.

இந்த சம்பவத்தில் முன்னதாக 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.