Rotorua ஏரியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட சடலம் மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன, படகு ஓட்டும் நபர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் Rotorua வை சேர்ந்த 18 வயதான Gregory Flavel என்ற நபர் ஆவார்.

கடந்த 10 ஆம் திகதி அன்று Rotorua ஏரியில் படகு ஓட்டிக் கொண்டிருந்தபோது ஃபிளாவெல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேடுதலில் ஈடுபட்ட  கடல்சார் குழு, கடலோர காவல்படை, கடற்படை மற்றும் LandSAR உட்பட போலீசார் அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் தங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புவதாக காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில் ஃபிளாவெல்லின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.