மாநில நெடுஞ்சாலை 1 இல் நான்கு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஐந்து மணி நேரம் Ōtaki அருகே சாலை மூடப்பட்டது.

இந்த விபத்து காலை 6.15 மணியளவில் இடம்பெற்றதாகவும் சிலர் இந்த விபத்தில் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர சேவைகளுடன் ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என Waka Kotahi  தெரிவித்தது.

வாகன ஓட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் மற்றும் குறிப்பிடத்தக்க தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

இதனிடையே ஐந்து மணி நேரம் மூடப்பட்ட சாலை, காலை 11 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.