மத்திய ஆக்லாந்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று காலை கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.

குயின் ஸ்ட்ரீட்டில் உள்ள குறித்த நகைக்கடையில் அதிகாலை 3 மணிக்கு முன் இந்த திருட்டு நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டு இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் திருடப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
'Operation Rhino' என்ற காவல்துறை நடவடிக்கையானது ராம் ரெய்டுகள், இரவு நேர திருட்டுகள் மற்றும் நகைக்கடை கொள்ளைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தும் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.