டன்னீடன் புறநகர்ப் பகுதியான Mosgiel இல் உள்ள மதுக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற ஒரு கொள்ளை‌ சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு முன்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இரண்டு பேர் குறித்த மதுக்கடையில் நுழைந்தவுடன் அவர்களின் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, பணத்தைக் கேட்டார்.

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபர் இன்று டன்னீடன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த மதுக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.