முன்னாள் ஊனமுற்றோர் உரிமைகள் ஆணையர் பவுலா டெசோரிரோ, எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நியூசிலாந்தின் ஊனமுற்றோர் அமைச்சகத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்க உள்ளார்.

2008 தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற பாராலிம்பிக் சைக்கிள் வீராங்கனையான இவர் 2017 முதல் ஊனமுற்றோர் உரிமை ஆணையராகவும், 2018 முதல் 2019 வரை செயல் தலைமை மனித உரிமை ஆணையராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.