ஆக்லாந்தில் நடந்த வன்முறை கொள்ளை சம்பவம் தொடர்பில் குற்றவாளியை கைது செய்ய காவல்துறை பொதுமக்களிடம் தகவல்களை முறையிடுகிறது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று சில்வியா பார்க் ஷாப்பிங் சென்டரில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது கைக்கடிகாரமும் பணப்பையும் திருடப்பட்டது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சந்தேக நபர் அங்கிருந்து மாலை 5.55 மணியளவில் Panmure விற்கு ரயிலில் ஏறி தப்பிச் சென்றார்.

இதனையடுத்து சந்தேக நபரை அடையாளம் காண தற்போது அவரது புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

"இது ஒரு நம்பமுடியாத கொடூரமான சம்பவம்" என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கிரெக் பிராண்ட் கூறினார்.

அந்த நபரை அடையாளம் காணும் எவரும் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் தெரிவித்தார்.