ஆக்லாந்தைச் சேர்ந்த கெவின் பேட்ரிக் ஹேவின் என்ற நபரின் மரணம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 16 ஆம் திகதி அன்று Northcote இன் Ocean View சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே 50 வயதான குறித்த நபரின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

ஒரு அறிக்கையில், துப்பறியும் இன்ஸ்பெக்டர் கெவின் மெக்நாட்டன், Northcote ஐ‌ சேர்ந்த 55 மற்றும் 56 வயதுடைய இருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றார்.

அவர்கள் இன்று பிற்பகல் North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.