நேற்றைய தினம் இரவு பெய்த கன மழையால் எதிர்பார்த்ததை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக நெல்சன் டாஸ்மன் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.

நெல்சன் பகுதியில் உள்ள மேலும் 98 வீடுகளில் உள்ளவர்கள் நேற்றிரவு வெளியேற்றப்பட்டதால்‌ வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 508 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றிரவு மாவட்டம் முழுவதும் 168 மில்லிமீட்டர் மழை பெய்ததால், மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் மூடப்பட்டன.

பல வழித்தடங்கள் பகுதியளவு மட்டுமே தடை செய்யப்பட்டிருந்தாலும் வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பாக இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக Marlborough முழுவதும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.