தெற்கு ஆக்லாந்தில் உள்ள Kia Aroha கல்லூரியின் மாணவர் ஒருவர் இன்று காலை பள்ளியில் உயிரிழந்தார்.

இன்று மதியம் Clover Park இல் உள்ள குறித்த பள்ளிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது ஒரு சோகமான நிகழ்வு என்றும், இந்த நிலையில் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் பள்ளி குறித்த மாணவரின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

மாணவரின் இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது.