தெற்கு ஆக்லாந்தில் இன்று அதிகாலை எற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Takanini உள்ள வால்டர்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த தீயணைப்பு வீரர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அவர் பின்னர் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்று காலை எற்பட்ட தீ விபத்தில் நகைக்கடை கட்டிடம் மற்றும் பக்கத்து கடைக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.