நேற்றிரவு 10.30 மணிக்குப் பின்னர் Tauranga வில் ஒரு குடியிருப்பில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Maungatapu சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குழுவினருடன் தொடர்புடைய மோதல் சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது ஒருவர் உயிரிழந்த நிலையில் இருந்தார்.

இந்த ஒழுங்கீனச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று பொலிஸார் நம்புகிறார்கள்.

இதனையடுத்து Maungatapu சாலையில் இரண்டு வீடுகளில் இன்று காட்சிப் பரிசோதனைகள் தொடரும் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஜான் வில்சன் தெரிவித்தார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.