இன்று அதிகாலை ஆக்லாந்தில் இரண்டு பேர் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rosehill இல் உள்ள Orchard Rise இல் அதிகாலை 2 மணிக்கு முன்பு ஒரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காட்சி ஆய்வு மேற்கொள்ளப்படும் போது Orchard Rise மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு P050576411 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.