ஆக்லாந்தில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததும்‌ இரவு 11.30 மணியளவில் பொலிஸார் New Lynn இல் Gardner Avenue வில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து 47 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்துதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொலிஸாரின் சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் இன்று Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.