ஆக்லாந்தில் ஒரு கடை குறிவைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இரண்டு முறை கொள்ளையிடப்பட்டுள்ளது.

டொமினியன் சாலையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த கொள்ளை சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

குறித்த கடையை ஒரு வாகனம் மோதி முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக இந்தக் கடை சேதப்படுத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு வாகனத்தில் மூன்று பேர் புறப்பட்டனர்.

அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

முன்னதாக, குறித்த நபர்களால் நியூமார்க்கெட்டில் உள்ள ஒரு கடையின் நுழைவாயிலை அடித்து நொறுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.