பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரதமர் ஆடர்ன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது மகள் நெவ் இற்கு கடந்த புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக நான் எனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொவிட் தொற்றுக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மே 21 சனிக்கிழமை காலை வரை அர்டெர்ன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த வாரம் அரசாங்கத்திற்கு பல முக்கியமான நிகழ்வுகள் இருப்பதாக பிரதமர் ஆடர்ன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் அங்கு நேரில் இருப்பதைத் தவறவிட்டேன், ஆனால் அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பேன் மற்றும் இங்கிருந்து சில விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்" என அவர் தெரிவித்தார்.