வெலிங்டன் மருத்துவமனையில் இன்று புகை மூட்டம் சூழ்ந்தது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தீ அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை.

இதனையடுத்து ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மருத்துவமனையில் புகை சூழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எச்சரிக்கை அலாரம் ஒலித்ததை அடுத்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் வருகை தந்தன.

இருப்பினும் எதுவும் தீப்பிடிக்கவில்லை என்று FENZ தெரிவித்தது.

இந்நிலையில் தீயணைப்பு சேவை முன்னெச்சரிக்கையாக வந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும், நோயாளிகள் அல்லது சேவைகளுக்கு எந்த ஆபத்தும் அல்லது இடையூறும் ஏற்படவில்லை என்று வெலிங்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.