Whanganui நேற்று மாலை தாக்குதளுக்கு உள்ளான நபர் ஒருவர் வெலிங்டன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாக Whanganui கள குற்ற மேலாளர் இன்ஸ்பெக்டர் பால் பாஸ்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் 
காவல்துறையின் விசாரணைக்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிசிடிவி பதிவுகள் அல்லது சம்பவத்தை நேரில் கண்ட எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று பாஸ்கெட் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் முன் வந்து உங்களுக்குத் தெரிந்ததை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்" என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CIB) குறித்த பகுதியில் காட்சிப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கோப்பு எண் 220512/6199 ஐ மேற்கோள் காட்டி காவல்துறைக்கு தகவல்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.