என்சாண்டர் மீன்பிடி கப்பல் மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போன கடைசி நபரின் உடல் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவான கப்பல் மூலம் இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேடுதல் முயற்சிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொலிஸார் ஆறுதல் கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய புயலின் போது North Cape இற்கு அப்பால் விபத்திற்குள்ளான என்சான்டர் என்ற குறித்த படகில் பத்து பேர் இருந்தனர்.

நான்கு மணி நேரம் நீரில் மூழ்கிய கேப்டன் உட்பட ஐந்து பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

காணமல் போன கடைசி நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து விபத்து விசாரணை ஆணையம் படகு மூழ்கியது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.