கடந்த மாதம் மத்திய ஆக்லாந்தில் ஒரு நபர் இறந்ததை அடுத்து இரண்டு ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜோஸ்ப் தஹானா என்ற 29 வயதான நபர் கடந்த பெப்ரவரி 19 அன்று CBD இல் உள்ள Paul Street இல் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து அவரது மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கில் 30 மற்றும் 38 வயதுடைய இருவர் மீது ஆணவக் கொலை மற்றும் வழிப்பறிக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆக்லாந்து நகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஸ்காட் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் "தஹானாவின் மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினருடன் காவல்துறையினர் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர், மேலும் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிசெய்துள்ளனர்" என்று ஆம்ஸ்ட்ராங் கூறினார்.