இன்று பிற்பகல் ஆக்லாந்தில் உள்ள நிலத்தடி வணிக நிலையத்தில் கார் நிறுத்துமிடத்தில் ஒரு வாகனம் மோதி நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மானுகாவில் நடந்த சம்பவத்திற்கு பகல் 1 மணியளவில் அவசர சேவைகள் பதிலளித்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்.

நான்கு பேர் ஆபத்தான நிலையில் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என St John ஆம்புலன்ஸ் சேவை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.