Kaitaia வில் எட்டு பேரை பொலிஸார் கைது செய்து, ஒரு தொகை மெத்தம்பேட்டமைன் (போதைப்பொருள்) மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு முன்னதாக ஆலன் பெல் டிரைவில் நடந்த ஒரு மோதல் சம்பவத்தை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும், அருகில் உள்ள வளாகத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பொலிஸார் கண்டனர்.

இந்நிலையில் வாகனத்தில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை, சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளை வைத்திருந்தமை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிளாக் பவர் என்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனிடையே Far North Precision Targeting Team ன் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, சனிக்கிழமை பிற்பகல் பல பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு திருடப்பட்ட வாகனம், 117 கிராம் மெத்தம்பேட்டமைன், 88,000 டொலர் பணம் மற்றும் குறிப்பிடத்தக்க போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மற்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சப்ளைக்காக மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று கைதாயா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.