கடந்த மாதம் கிறிஸ்ட்சர்சில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பொலிஸார் இருவரை நேற்றைய தினம் கைது செய்தனர்.

ஜனவரி 23 அன்று Riccarton இல் உள்ள Yaldhurst சாலையில் உள்ள Growers Direct மார்க்கெட்டில் நடந்த குறித்த கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.