இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது ஐந்து மாத மகன் அகஸ்தியாவின் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது அவரது இணையர் நட்டாஷாவும் உடன் இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடந்த ஜூலை 30-ஆம் திகதி மகன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி அப்போதிலிருந்தே சமூக வலைத்தளத்தில் தனது மகனின் படங்களை அவ்வபோது பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹர்திக். இந்நிலையில் அவரது மகன் பிறந்து நேற்றோடு 5 மாதங்கள் நிறைவடைந்தது. அதை கொண்டாடும் விதமாக மகனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார் ஹர்திக்.

மேலும் ,அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு “என் பையன் பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. நானும், நட்டாஷாவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என கேப்ஷன் போட்டுள்ளார். அந்த போஸ்டை பல லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர்.