வெலிங்டனுக்கு வடக்கே ஏற்பட்ட ஒரு கடுமையான விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து புகெருவா விரிகுடாவிற்கு அருகில் உள்ள பிரதான நெடுஞ்சாலை மூடப்பட்டது.

காலை 10.30 மணியளவில் கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மாநில நெடுஞ்சாலை 59ன் இரு பாதைகளும் மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 11 மணிக்கு முன்னதாக அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன ஆனால் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரு வாகனம் மட்டுமே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தை அடுத்து சாலை சிறிது நேரம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.