வைகாடோவில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் Te Aroha வி உள்ள ஸ்டான்லி சாலையின் தெற்கு பகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

வாகனம் வீதியை விட்டு விலகி வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த விபத்தை அடுத்து தீவிர விபத்துப் பிரிவு சம்பவம் இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.