2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மேலும் இரு அணிகளைச் சேர்த்துக்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் வருடாந்த கூட்டத்தின் போதே இவ்வாகு குறிப்பிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தற்போது எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மேலும் இரண்டு அணிகளைச் சேர்த்து பத்து அணிகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.