Bay of Plenty இல் கும்பல்களை குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 25 பேரை பொலிஸார் கைது செய்து 11,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆயுதமேந்திய  பொலிஸார், Bay of Plenty முழுவதும் 39 சொத்துக்களை சோதனை செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 29 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன, மேலும் 80 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 7610 டொலர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

திருடப்பட்ட இரண்டு வாகனங்கள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நடவடிக்கையின் போது, 11,372 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.

செய்தி நிருபர் - புகழ்