தெற்கு ஆக்லாந்தில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் மீண்டும் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் Manuwera வில், Weymouth வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குற்றவாளிகள் குழு ஒன்று கொள்ளையடித்துள்ளது.

மேலும் நிலையத்திற்குள் நுழைவதற்காக கண்ணாடி ஜன்னலை அடித்து நொறுக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கடந்த வாரம் நகரம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களை குறிவைத்து ஐந்து முறை கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல் நிலையங்களைச் சுற்றி காவல்துறை பொலீஸ் பிரசன்னத்தைத் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே இந்த கொள்ளை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்