ஆக்லாந்தின் வடக்கே Omaha வில் இன்று பிற்பகல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக Omaha கடற்கரையின் வடக்குப் பகுதியில் ஒருவர் மூழ்கியதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சர்ஃப் லைஃப் சேவிங் நியூசிலாந்து ஊழியர்கள் குறித்த நபரை கரைக்கு கொண்டு வந்ததை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன.

அந்த நபரை உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பொலிஸார்  ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காவல்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்