நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் என கருதப்படும் ஒருவர் நேற்று முன்தினம் Ōtaki Gorge பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டங்கன் ஹில் என்ற குறித்த நபர் கடைசியாக அக்டோபர் 5 ஆம் திகதி Ōtaki இல் உள்ள Waihoanga சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் காணப்பட்டார்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என Manawatū பகுதி விசாரணை மேலாளர் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டேவ் தாம்சன் தெரிவித்தார்.

முறையான அடையாளம் காணும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முறையான அடையாளம் காணும் செயல்முறை இன்னும் முடிவடையாத நிலையில், 2023 அக்டோபரில் காணாமல் போனதாகக் கூறப்படும் டங்கன் ஹில்லின் உடல் என்று கருதப்படுகிறது என்று தாம்சன் கூறினார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகாரிகள் பல்வேறு நிபுணர்கள் மற்றும் மரண விசாரணை அலுவலகத்துடன் இணைந்து சடலத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஹில்லின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தாம்சன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்