Christchurch கடையொன்றில் இன்று மதியம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hei Hei இல் உள்ள Wycola Avenue வில் அமைந்துள்ள ஒரு கடைக்குள் ஒருவர் மாலை 4 மணிக்குப் பிறகு துப்பாக்கியுடன் நுழைந்தார்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே குறித்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்