Waimakariri ஆற்றின் கரையில் உள்ள 2 கிமீ விவசாய நிலம் மற்றும் பைன் காடுகள் தீக்கிரை ஆகியுள்ளன.

சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் தளத்தில் இருப்பார்கள் என்று தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.

தீ பரவல் ஏற்பட்ட பகுதிகளை சுற்றியுள்ள சாலைகளில் வேகக் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.

இந்நிலையில், யாராவது புகை அல்லது நெருப்பை கண்டால், உடனடியாக 111 ஐ அமைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்