கடந்த திங்கட்கிழமை Dunedin இல் கொலை செய்யப்பட்ட குர்ஜித் சிங்கின் உடல் அவரது சொந்த நாடான இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக தற்போது Christchurch இற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குர்ஜித்தை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது தொழில்நுட்ப வல்லுநர் நேற்றைய தினம் Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வந்துள்ள குர்ஜித்தின் தந்தைக்கு ஆதரவளிப்பதாக பஞ்சாபி சமூகத் தலைவர் ஹர்ஜித் மாகூ கூறினார்.

குர்ஜித் சிங்கின் உடல் நேற்று பிற்பகல் Christchurch இற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், குடும்பத்தினர் அதை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் மகூ கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக கிவ்அலிட்டில் நிதி திரட்டும் பக்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்