தெற்கு ஆக்லாந்தின் ஆரம்பக் கல்வி நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வந்த புகாரின் பேரில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு முன்னதாக Manurewa வில் உள்ள Sturdee வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள ஆரம்பக் கற்றல் மையம் பூட்டப்பட்டது.

மேலும் ஈகிள் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் பொலிஸார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஏர் ரைஃபிளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இன்ஸ்பெக்டர் டேனி மீட் கூறுகையில், மக்கள் வசிக்கும் பகுதியில் ஏர் கன் பயன்படுத்துவதற்கு முன்பு இருமுறை யோசிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கைது செய்யப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்