இன்று காலை Pōrangahau வில் இருந்து 20 கி.மீ மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

மேலும் கீழ் North Island முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜியோநெட் இணையதளத்தில் 5000க்கும் மேற்பட்டோர் முதல் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

செய்தி நிருபர் - புகழ்