கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்தின் Muriwai கடற்கரையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இளம்பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர் மேற்கு ஆக்லாந்தைச் சேர்ந்த 19 வயதான மேடிசன் மேரி சேம்பர்லைன் என்ற பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் இருபது வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து ஆக்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்கரையில் வாகனங்கள் தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் கார்கள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்ற விதிமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்