Christchurch இன் வடக்கே ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ காரணமாக  சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் Amberley இற்கு வெளியே Racecourse சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

பல தண்ணீர் டேங்கர்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

Racecourse சாலையில் உள்ள சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு Amberley நூலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்