Whanganui இற்கு தெற்கே வாகனம் ஒன்று சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காலை 8 மணியளவில் Whangaehu அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை மூன்றில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

Whanganui இல் இருந்து வந்த இரண்டு தீயணைப்பு கருவிகள் தீயை அணைத்ததாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.

மேலும் குறித்த வாகனத்தில் பயணித்த டிரைவர் மற்றும் ஒரு பயணி இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை என்பதை அது உறுதிப்படுத்தியது.

செய்தி நிருபர் - புகழ்