Northland நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 14 இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்நிலையில் Whangārei மற்றும் Dargaville இற்கு இடையில் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது.
இதனையடுத்து வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி நிருபர் - புகழ்