இன்று பிற்பகல் ஆக்லாந்தின் Manukau என்ற இடத்தில் பொலிஸ் கார் ஒன்று திருடப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற்பகல் 1 மணிக்குப் பிறகு, Puhinui சாலையில் இருந்து ஒரு பொலீஸ் வாகனத்தை ஒருவர் திருடினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காவல்துறை வாகனத்தை குற்றவாளி "வேகமாக" ஓட்டிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, Great South வீதி மற்றும் Alfriston சாலை சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது பொலீஸ் வாகனம் மோதியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் போது பொதுமக்களில் இருவர் மிதமான மற்றும் சிறிய காயங்களுக்கு ஆளாகினர், மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் பொது நபர் ஒருவரின் உதவியுடன் குற்றவாளியை பொலிஸார் கைது செய்ததாக ஒரு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

செய்தி நிருபர் - புகழ்