Far North இல் உள்ள Ninety Mile கடற்கரையில் நேற்றைய தினம் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இன்னும் அந்த நபரை அடையாளம் காணவில்லை.

அடையாளம் காணப்பட்டதும், அவர்களது அடுத்த உறவினருக்கு அறிவிப்போம், மேலும்  மரணத்திற்கான காரணத்தை கண்டறிவோம் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதனிடையே டிசம்பரில் கடற்கரையின் தெற்கு முனையில் உள்ள Ahipara வில் ஒரு மூழ்காளர் (Diver) காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் காணாமல் போன குறித்த நபரை பொலிஸார் தேடி வந்தனர்.

மோசமான வானிலையால் கடல் மற்றும் வான்வழி தேடுதல் பணி முதற்கட்டமாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Ahipara வில் காணாமல் போன நபருக்கும் Ninety Mile கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என மிக விரைவில் உறுதிப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்