ராய்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தில்ஷான் தலைமையிலான  இலங்கை அணி சச்சின் தலைமையிலான இந்திய அணியை , எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யூசுப் பதான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.