Napier/ Ahuriri இல் நடந்த Iron Māori போட்டியில் நீச்சல் வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் தனது பேஸ்புக் பக்கத்தில், Ahuriri பகுதியில் மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

Iron Māori இன் நீச்சல் போட்டியின் போது இறந்த போட்டியாளரின் குடும்பத்திற்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

காலை 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Iron Māori நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும், ஆனால் தொற்றுநோய் காரணமாக அது நான்கு ஆண்டுகள் தடைபட்டது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

செய்தி நிருபர் - புகழ்