Rotorua வில் சிறுமிகளுக்கு போதைப்பொருளை வழங்கி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஜான் வில்சன் கூறுகையில், 49 வயது ஆணும் 31 வயது பெண்ணும் சட்டவிரோதமான வணிக பாலியல் சேவையை நடத்தியதாகக் கூறப்படுகிறது, இது சிறுமிகளை உள்ளடக்கியது.
அவர்களுக்கு கஞ்சா மற்றும் மெத்தாம்பேட்டமைன் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
நிதி ஆதாயத்திற்காக இளைஞர்களை பயன்படுத்துவது வெறுக்கத்தக்க நடத்தை.
நியூசிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களை மெத்தாம்பேட்டமைன் பயன்பாடு தாக்கியுள்ளதாகவும், அதன் விற்பனையைத் தடுக்க பொலிஸார் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று Rotorua மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் மீண்டும் அக்டோபர் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களில் தாங்கள் பாதிக்கப்பட்டதாக நம்புபவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்