வரம்பிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய Hawke's Bay ரக்பி வீரர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

24 வயதான இவர் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் சமூக நீதவான் முன்னிலையில் ஆஜரானார்.

இதனையடுத்து ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதித்த நீதிபதி 600 டொலர்கள் செலுத்த உத்தரவிட்டார்.

துவாசா-ஷெக் என்ற குறித்த ரக்பி வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் வரம்பிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு Hunter Drive இல் தனது காரை வேலி ஒன்றில் மோதியமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்