Palmerston North பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோடிய குற்றவாளிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு சுமார் 10.20 மணியளவில் Tremaine Avenue வில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் மூன்று பேர் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் கேட்டு மிரட்டியதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில் மூவரும் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிச் சென்ற வாகனம் அதிகாலை 2.30 மணியளவில் காலேஜ் தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்ததை அடுத்து குற்றவாளிகள் வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இதனையடுத்து வேகமாக சென்ற அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இந்நிலையில் காரில் இருந்த இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூன்றாவது நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பொருட்கள் வாகனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளை சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்