கிஸ்போர்ன் வீதியில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பொலிஸார் கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் இரவு டிடோகி தெருவில் நடந்த ஒரு மோதல் சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்தில் 36 வயதான பெண் ஒருவர் உயிரிழந்து இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"காவல்துறையினர் இன்னும் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர், மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று காவல்துறை ஏரியா மேலாளர் சார்ஜென்ட் டேனியல் கிர்க்சைட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் இன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.