தெற்கு ஆக்லாந்தில் இன்று அதிகாலை 3.25 மணியளவில் மாங்கேர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Bader Dr மற்றும் மெக்கென்சி வீதி சந்திக்கும் இடத்திற்கு அருகே ஒரு மரத்தில் குறித்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் இருந்த ஆண் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அவர் ஆக்லாந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செயின்ட் ஜான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காலை 9 மணி வரை சம்பவ இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.