இலங்கை

ஈ - விசா தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை மாத்திரமே பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.